அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

தண்ணீர் பந்தல்

சோளிங்கர் பகுதியில் அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் பாண்டியநல்லூர் கூட்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நீர்மோர், இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார். நகர பொருளாளர் கொண்டபாளையம் மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஏ.எல்.சாமி, நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், ஒன்றியத்தை சேர்ந்த சூரைதேவன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story