அதிமுக சார்பில் போட்டியிட 2475க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 2475 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்புமுள்ளவர்கள் அதிமுக அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்தி அளிக்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்து, அதற்கான விருப்ப மனு வினியோகம் கடந்த மாதம் பிப்ரவரி 21 ம் தேதி தொடங்கி மார்ச் 1 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் அது 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பித்தனர். மொத்தமாக 2475 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

Tags

Next Story