தமிழக சட்டசபையில் அ.தி.மு.க -வினர் சஸ்பெண்ட்!

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க -வினர் சஸ்பெண்ட்!

அ.தி.மு.க

தமிழக சட்டசபையில் அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.

அவை நடவடிக்கைக்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் நேரு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை முதல்வர் ஸ்டாலின் வழிமொழிந்தபோது கூட்டத்தொடர் முழுவதும் என்பதில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.



Tags

Next Story