தொற்று நோய் பரவலை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை

தொற்று நோய் பரவலை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை

தொற்றுநோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


தொற்றுநோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம் ( IHIP), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் இணையதளத்தை ( IDSP) மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்ததளத்தில் S, P மற்றும் L ஆகிய மூன்று படிவங்கள் உள்ளன. சுகாதார ஆய்வாளர்கள். கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் பெறப்பட்டு, தொற்றுநோய் குறித்த தகவல்கள் இந்த படிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு தொற்றுநோய் பரவல் தடுப்பு மாவட்ட மற்றும் வட்டார அளவிலான விரைவு நடவடிக்கை குழுக்கள் மூலம் (Rapid Response Team) மேற்கொள்ளப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல் / சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள் அம்மை நோய்கள் மஞ்சள் காமாலை, வெறிநாய் கடி, போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து இந்த https://ihip.mohfw.gov.in/cbs/V. இணையதளத்தில் பெயர், தொலைபேசி எண், வயது, வேலை, கிராமம், மாவட்டம், மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம் மற்றும் தொற்றுநோய் குறித்த விவரம் போன்றவற்றை பதிவு செய்து பொதுமக்கள் தாங்களே தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத்துறை விரைந்து கள நடவடிக்கை எடுத்து கொள்ளைநோய் பரவலைத் ஏற்படுத்தப்பட்டுள்ளது தடுக்க இவ்வசதி மேலும் தகவல் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் தெரிவித்து கொள்ளப்படுகிறது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கொள்ளை நோய் பரவலை தடுத்திட இந்த இணையதள வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story