+2 துணை தேர்வு : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

+2 துணை தேர்வு : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

துணைத்தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் 

பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை துணை தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்து முடிந்த மேல்நிலை தேர்வுகளில் தவறிய மற்றும் தேர்வு எழுதாத மாணவ மாணவிகள் ஜூன் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் துணை தேர்வில் பங்கேற்று தேர்ச்சி வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story