மீண்டும் சீமானுக்கு வந்த சோதனை!

மீண்டும் சீமானுக்கு வந்த சோதனை!
சீமான் 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாமல் ஒலிவாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் இறுதி செய்தது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டு வரும் நிலையில், ஒருபுறம் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ஒலிவாங்கி சின்னத்தை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறுத்தாமல், வேறு மைக் சினத்தை பொருத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மைக் சின்னத்தினை பொருத்தாமல் வேறுமை சின்னம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

Tags

Next Story