மீண்டும் முழுகம்பத்தில் தேமுதிக கொடி பறக்கவிடப்பட்டது

மீண்டும் முழுகம்பத்தில் தேமுதிக கொடி பறக்கவிடப்பட்டது

முழுகம்பத்தில் தேமுதிக கொடி

தேமுதிக கொடி மீண்டும் முழுகம்பத்தில் பறக்கவிடப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி கடந்த ஒரு மாதமாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் தமிழகம் முழுவதும் ஒன்றியம் முதல் கிராமங்கள் வரை உள்ள தேமுதிக கழக கொடி முழு கம்பத்தில் பறக்க விட வேண்டுமென கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கட்சியின் கொடியை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முழு கம்பத்தி பறக்க விட உள்ளார்.

Tags

Next Story