அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் இன்றுடன் நிறைவு !!

அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் இன்றுடன் நிறைவு !!

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் கடந்த 4- தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது. பொதுவாக கத்தரி வெயிலின் போது வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல நகரங்களில் இந்த 90 டிகிரி தாண்டி வெயில் பதிவாகி வந்தது. சில ஆண்டுகளில் கத்தரி வெயில் தெரியாத வகையிலும் இருந்துள்ளது ஆனால் இந்த ஆண்டு கடந்த 4- தேதி கத்திரி வெயில் தொடங்கியது.

முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்து வாட்டி வந்தது. இந்த ஆண்டு கத்தரி வெயில் தொடங்குவதற்கு முந்தைய நாள் அதாவது மே 3- தேதி 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தொடர்ந்து கத்திரி வெயில் தொடங்கிய நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி காலநிலை இருந்தாலும் கடந்த 8-தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை கத்தரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. கடந்த 4-தேதி 15 இடங்கள் கடந்த 7- தேதி 11 இடங்கள் 8-தேதி 9 இடங்களில் வெயில் வாட்டி வந்தது. தொடர்ந்து 24ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இருந்தது இதற்கிடையில் 22ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கத்தரி வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று கத்தரிவேல் நிறைவடைகிறது. இது பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்கும் இருப்பினும் அக்னி நட்சத்திரம் என்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனாலையே பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படுகிறது என்று அதிகாரங்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story