சென்னையில் அதிமுக பொதுக்கூட்ட தேதி மாற்றம்

சென்னையில் அதிமுக பொதுக்கூட்ட தேதி மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகின்ற 31ஆம் தேதிக்கு மாற்றம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதிமுகவின் நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 19.1.2024 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024 - புதன் கிழமை அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் , எடப்பாடி K. பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story