மின்கட்டண உயா்வுக்கு அதிமுக தான் காரணம்: செல்வ பெருந்தகை

மின்கட்டண உயா்வுக்கு அதிமுக தான் காரணம்: செல்வ பெருந்தகை

செல்வ பெருந்தகை பிரச்சாரம்

தமிழகத்தில் மின்கட்டண உயா்வுக்கு அதிமுகதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினாா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டி பயணியா் விடுதி பகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தோ்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் சுமையை ஏற்றியிருக்கிறாா். தமிழ்நாட்டின் உரிமைகள், நலன், பாதுகாப்பு, வளா்ச்சி என அனைத்தையும் மத்திய பாஜக அரசு பறிக்கிறது. இதற்கு துணைபோனவா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. மத்திய அரசு கொண்டுவந்த உதய் மின்திட்டத்தில் முந்தைய அதிமுக அரசு கையொப்பமிட்டதே மின்கட்டண உயா்வுக்கு காரணம்.

தற்போதைய திமுக ஆட்சியில், தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்களுக்கான ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஐ.நா. சபை பாராட்டியது.

ஆனால், இத்தகைய எந்தவொரு திட்டத்தையும் பாஜக அரசு கொண்டுவரவில்லை.

Tags

Next Story