நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி: ராஜேந்திர பாலாஜி

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே வட.மலை குறிச்சியில் அதிமுகவின் 52 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே டி இராஜேந்திர பாலாஜி கலந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே டி இராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வாள் பரிசாக வழங்கபட்டது. பின்னர் பொதுகூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திரபாலாஜி, இன்று அதிமுகவிற்கு வயது 52 ஆகும்.

இது ஒரு பக்குவம் அடைந்த வயது ஆகும் என்றார். மேலும் பேசிய தமிழகத்தில் உள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய போது திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதும் எல்லாம் பொய் எனவும் மக்கள் திமுக சொன்ன பொய்களை நம்பி வாக்கு அளித்தனர் என்றார். மேலும் அனைத்து குடும்ப தலைவி களுக்கும் மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்.

தற்போது 29 மாதங்கள் கழித்து 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக கணக்கு சொல்கிறார் கள் ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் அது ஒரு ஏமாற்று வேலை என்றார். மேலும் பேசிய கே.டி இராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னவர்கள் இன்று 2 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு கையெழுத்து இயக்கம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒரு ஏமாற்று வேலை என்றார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்னும் மக்களை ஏமாற்று வதற்காக நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நீட் தேர்வை ஒழிப்பதற்கு கையெழுத்து இயக்கம் நடத்து கிறோம் என மக்களை ஏமாற்ற பார்க்கிறார் என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் செய்வது எல்லாம் நாடகம் நடப்பது எல்லாம் நடிப்பு என விமர்சனம் செய்தார். தமிழகத்தில் தற்போது நடக்கும் திமுக ஆட்சி தொழில் அதிபர் களுக்கான ஆட்சி ஆலை அதிபர் களுக்கான ஆட்சி என விமர்சனம் செய்த கே.டி இராஜேந்திர பாலாஜி ஏழைகளுக்கான ஆட்சி வேண்டும் என்றால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் பேசிய கே.டி இராஜேந்திர பாலாஜி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிச்சாமி நாட்டிற்கு பிரதமராக வர வாய்ப்புள்ளதாக கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்

Tags

Next Story