அதிமுகவுடன் கூட்டணி - தேமுதிக மா.செக்கள் வலியுறுத்தல்?..

அதிமுகவுடன் கூட்டணி - தேமுதிக மா.செக்கள் வலியுறுத்தல்?..

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தனது விருப்பங்களை கடிதங்கள் மூலம் எழுதி கொடுத்தாக கூறப்படுகிறது..

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் கூறியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு அதிமுகவுடன் செல்வதே நமக்கு நல்லது என்றும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் நமக்கு தேவையானதை கேட்டுப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நம்முடைய விருப்பத்தை, வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைப்பதே நல்லது என்றும் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

Tags

Next Story