திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சிபிஎம் கட்சிகள் ஒதுக்கீடு

நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டது.

திமுக - சிபிஎம் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என்பது இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளை கேட்ட அளவில் திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கி கைவைத்து ஒப்பந்தம் ஆகி உள்ளது.

இரண்டு தொகுதிகளில் ஒப்பந்தம் செய்த நிலையில் என்ன தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முத்தரசன் நாடு காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், என்ற நோக்கில் 3 தொகுதி கேட்ட நிலையில் தற்போது இரண்டு தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது‌ என தெரிவித்தார்.

Tags

Next Story