அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு

குலுக்கல் முறையில் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி குலுக்கள் முறையில் நடைபெற்றது.
அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தல் பொதுப் பார்வையாளர் சுனில்குமார், முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வளர்மதி வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 5,386 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யும் பணியை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- மண்டலங்கள் வாரியாக பிரித்து, அலுவலர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் தயார் செய்திட வேண்டும் என்றார்.

Tags

Next Story