மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது!

மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது!

அமமுக நிர்வாகி பிரதீப் மனைவி உஷா

கே வி குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக நிர்வாகியின் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூரை சேர்ந்தவர் பிரதீப் ( 40). கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அமமுக பொறுப்பாளர். இவரது மனைவி லிஷா (33). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இது தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லிஷா வீட்டில்

தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து லிஷாவின் தந்தை கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பிரதீப்பை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story