தாம்பரம் முதல் கடற்கரை வரை நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

தென்னக ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை கூடுதல் 150 பேருந்துகள் இயக்கப்படும்.
தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 10.00 மணி முதல் மாலை 3:30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் - மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல். தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 3:30 மணி வரை ரத்து செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதால், அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை நாளை இயக்கவும், மா.போ.கழகம் முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story