அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு !

அடையாளம் தெரியாத முதியவர்  உயிரிழப்பு !

முதியவர் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலை ஓரத்தில் மயங்கி உயிரிழந்தார். முதியவர் யார் எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

அரியலூர், ஏப்.22- ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலை ஓரத்தில் மயங்கி உயிரிழப்பு வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அனைக்குடத்தில் இருந்து அமிர்தராயன் கோட்டை செல்லும் பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். தண்ணீரை குடித்த முதியவர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

பின்னர் இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எப்படி இறந்தார் நடந்து செல்லும் போது வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story