தர்மபுரி அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அன்புமணி ராமதாஸ்

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அன்புமணி ராமதாஸ்

தருமபுரி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டல்பட்டி கூட்ரோடு பகுதியில், இரு சக்கர வாகனத்தி்ல் சென்றவர்கள், விபத்தில் சிக்கி கொண்டனர். அப்போது அந்த வழியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்துகொண்டிருந்தார். விபத்தில் சிக்கியவர்களை கண்ட அவர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். விபத்து தொடர்பாக மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story