கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்

கங்கை கொண்ட சோழபுரம்


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. உலக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் இன்று அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதற்காக ஆயிரம் மூட்டை பச்சை அரிசியால் சமைக்கபட்ட சாதம் லிங்கத்தின் மீது சாத்தபட்டு வருகிறது.

லிங்கத்தின் மீது சாத்தபடும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெரும் என்பதால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால் இதனை காண கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி நாடு்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை காய்கறிகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாராதணை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story