கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையே காரணம் - எஸ்.பி.வேலுமணி !

கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையே காரணம் - எஸ்.பி.வேலுமணி !

எஸ்.பி.வேலுமணி

சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட தற்போது அண்ணாமலை குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''பாஜக மாநில தலைவராக, எல்.முருகனும், தமிழிசை சௌந்தரராஜனும் இருந்த வரை கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பாஜக மாநில தலைவராக, அண்ணாமலை பதவியேற்ற பின், அதிமுக தலைவர்களை விமர்சித்ததாலயே பிரச்னை துவங்கியது. அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் லோக்சபா தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையே காரணம். சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட தற்போது அண்ணாமலை குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.'' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story