அண்ணாமலை தோல்வி : மொட்டையடித்து கொண்ட பாஜக நிர்வாகி!

அண்ணாமலை தோல்வி : மொட்டையடித்து கொண்ட பாஜக நிர்வாகி!

பாஜக நிர்வாகி ஜெயசங்கர்.

கோவையில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என சவால் விட்டு தோல்வியடைந்ததால் பாஜ நிர்வாகி மொட்டையடித்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் பரமன் குறிச்சி முந்திரி தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவ்வாறு அப்படி வெற்றி பெறவில்லை என்றால் , பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் புதன்கிழமை பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்தார்.

Tags

Next Story