தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

தமிழிசை - அண்ணாமலை

முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளராகவும் களமிறங்கிய தமிழிசையை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை தந்துள்ளார்.

சந்திப்பிற்குப் பின் ``அன்புத் தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி'' என தமிழிசை சௌந்தரராஜனும்,

''மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான தமிழிசையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறியவர். அவரின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது'' என அண்ணாமலையும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story