ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்!

ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்!

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்து 5 மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்


வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்து 5 மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்

தூத்துக்குடி - நெல்லை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. ரூ.234 கோடி மதிப்பீட்டில் நடந்த இந்த பணிகள், கால தாமதம் காரணமாக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு 2012ல் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லை - தூத்துக்குடியை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது. ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ம் ஆண்டு பாவத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதுபோல் பல முறை ஓட்டை விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்த பிறகு ஐந்தே மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், பொறியாளர்கள் வல்லநாடு பாலப் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story