மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டுகோள்

மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டுகோள்

ஆய்வு செய்த பிரேமலதா விஜயகாந்த் 

வெள்ளம் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா். சாத்தான்குளம், அமுதுண்ணாக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பாா்வையிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கிஆறுதல் கூறினாா். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளம் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.

மக்களுக்கு வேண்டிய உதவிகளை போா்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றாா். தேமுதிக மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.யூ. சதீஷ், மாவட்ட அவைத் தலைவா் சித்திரைராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

Tags

Next Story