தமிழில் சதம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழில் சதம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தலைமை செயலகம் 

தமிழில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள 43 மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக 10, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ள 1,761 அரசு உயர்நிலை மேல்நிலைப் தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுப் பெருமை கொண்டுள்ள 43 மாணவ மாணவியர் , அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.‌

Tags

Next Story