உடையார்பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

உடையார்பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அரியலூர், ஜூன் 19 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி ஆகியோர் பள்ள தலைமை ஆசிரியர் முல்லைக்கொடி மற்றும் ஆசிரியர்களை பாராட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய 100 சதவீத தேர்ச்சி சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் கணிதப் பாடத்தில் 100}க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவி பவித்ரா, ஆசிரியர் தமிழரசி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் இங்கர்சால், செல்வராஜ், சாந்தி, வனிதா, மஞ்சுளா, பாவை சங்கர் ,தமிழாசிரியர்கள் ராமலிங்கம், காமராஜ், ராஜசேகரன் ,சங்கீதா, சசத்யா,அருட்செல்வி,லூர்துமேரி, உடற்கல்வி ஆசிரியர் ஷாயினஷா கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story