ஆ.ராசா இம்முறை கூஜா தூக்குவார் - செங்கோட்டையன்

ஆ.ராசா இம்முறை கூஜா தூக்குவார்  - செங்கோட்டையன்

அதிமுக பொதுக்கூட்டம் 

மலைவாழ் மக்களுக்கு துரோகம் விளைவித்த ஆ.ராசா தேர்தலில் நின்றால் இம்முறை கூஜா தூக்கி கொண்டு செல்வார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டார் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை, திப்பு சுல்தான் ரோட்டில் நடந்தது.

பொதுக் கூட்டத்திற்கு பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே. ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ, மற்றும் கழக அமைப்புச் செயலாளர், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டானர்.

கூட்டதில் பேசிய செங்கோட்டையன், வரும் எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும், 40 தொகுதிகளும் அஇஅதிமுக வெற்றி வாகை சூடும், திமுகவினர் கடம்பூர் மலைப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலை பரம்பரையாக நிர்வாகித்து வரும் கிராம மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டதற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா காற்றிலே ஊழல் செய்தார். மலைவாழ் மக்களுக்கு துரோகம் விளைவித்த ராசா தேர்தலில் நின்றால் இம் முறை ராசா கூஜா தூக்கி கொண்டு செல்வார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெறுவோம் என பேசினார். கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story