அரக்கோணம்: தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை!

அரக்கோணம்: தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை!

வாகன சோதனை

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து தேர்தலில் பறக்கும் படையினர் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கம், நெமிலி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் அரக்கோணம் ஓச்சேரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோக் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கூறுகையில், "உரிய ஆவணங்கள், ரசீது இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது. மீறினால் பணம் பறிமுதல் செய்யப்படும். அனுமதி பெறாமல் வாகனங்களில் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை பயன்படுத்தக்கூடாது,"என்றார்.

Tags

Next Story