ஆற்காடு: மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை!

ஆற்காடு: மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை!

 போலீசார் வழக்குப்பதிவு

மாற்றுத்திறனாளியை அடித்துக் கொன்ற அவரின் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (35). மாற்றுத்திறனாளியான இவர் பீடி சுற்றும் வேலை செய்து வந்துள்ளார்.இவரது மனைவி புனிதா இவர்களுக்கு தீபக் (10), சரண்யா (9) ஆகிய மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் தம்பிகள் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் சத்தியமூர்த்தி (28), சவுந்தர்ராஜன் (26) ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் சரவணனை சத்தியமூர்த்தி கட்டையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விழந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இன்று ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திய மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story