“தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா?” - மதிமுக எம்.பி., வைகோ பேச்சு

“தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா?” - மதிமுக எம்.பி., வைகோ பேச்சு

மதிமுக எம்.பி., வைகோ

கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளதாக மதிமுக எம்.பி., வைகோ தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது.

இலங்கை கடற்படையினரால் இவ்வளவு துயரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஆளாகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய குடிமக்களா?, இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமேயானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags

Next Story