தம்மம்பட்டி 18-வது வார்டில் பகுதி சபை கூட்டம்

தம்மம்பட்டி 18-வது வார்டில் பகுதி சபை கூட்டம்

கிராம சபா கூட்டம் 

தம்மம்பட்டி 18-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் பனந்தோப்பு பகுதியில் சபை கூட்டம் நடந்தது. பேரூராட்சி துணைத்தலைவர் சந்தியா ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில கபடி போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த தம்மம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, தம்மம்பட்டி பகுதியில் அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story