அரியலூர் : திமுக நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

அரியலூர் : திமுக நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

விநாயக வேல்

அரியலூரில் திமுக இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் விநாயக வேல் மற்றும்அவரது உறவினர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அரியலூர், ஏப்.8- அரியலூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற விநாயக வேல். இவர் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட இணை செயலாளராக உள்ளார். இந்நிலையில் வருமான வரித்துறை நோடல் ஆபீசர் மனோஜ் குமார் தலைமையிலான மூன்று குழுவினர், அரியலூர் நகரில் புது மார்க்கெட் தெரு மூணாவது சந்தில் உள்ள அப்பு என்கிற விநாயகவேல் வீட்டிலும், அரியலூர் நகர் பெரியார் நகர் மூன்றாவது தெருவில் உள்ள அவரது தந்தை அண்ணாதுரை வீட்டிலும் மற்றும் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் ராணி வீட்டிலும் வருமான வரி சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு இடத்திலும் சுமார் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையில் அவருக்கு வந்த வருமானங்கள், கடந்த ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வருமான வரி தகவல்கள், அவரின் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்படுவதாக தெரிகிறது.

Tags

Next Story