தேரூர் இரட்டை கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு

தேரூர் இரட்டை கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு
கைதான குற்றவாளி,கொலையான வன ஊழியர் தம்பதி

குமரி மாவட்டம் தேரூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வனஊழியர். இவரது மனைவி யோகேஸ்வரி. இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதாசிவத்தை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சதா சிவத்தை நாகர்கோவில் ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் அவராய் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story