கலைஞர் நினைவு நாள்: மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி !

கலைஞர் நினைவு நாள்:  மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி !

மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற்றது.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6வது நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மு.பெ. சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மலர் மரியாதை தூவி செலுத்தினர். முன்னதாக கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags

Next Story