அருணாசலேசுவரர் கோயில் மாடவீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

அருணாசலேசுவரர் கோயில் மாடவீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கான்கீரிட் அமைக்கும் பணி


அருணாசலேசுவரர் கோயில் மாடவீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மாடவீதியை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நேரில் சென்று ஆய்வு செய்து தெரிவித்தாவது , திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருவூடல் தெரு சந்திப்பிலிருந்து காந்தி சிலை வரை 1000 மீ. அளவில் நவீன இயந்திரங்களை கொண்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் புதியதாக சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், மின் பகிர்மான கழகம் சார்பில் மின் வடம் பதித்தல் பணிகள், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை ஆகிய பணிகள் அனைத்தும் பணிகளும் முழுஅளவில் முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி கட்ட பணியினை போர்கால அடிப்பயிைல் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அனைத்து பணிகளையும் இம்மாத இறுதிகுள் நிறைவு செய்ய வேண்டுமென இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story