தமிழ்நாட்டில் கன மழையின் காரணமாக வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் கன மழையின் காரணமாக வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

அவசர கால கட்டுபாட்டு மையம் 

தமிழ்நாட்டில் கன மழையின் காரணமாக மே 16ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கன மழையின் காரணமாக மே 16ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறப்பு ஏற்பட்டுள்ளதோடு 24 குடிசைகள்/ வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இந்த கனமழையின் காரணமாக மொத்தம் 9 முகாம்களில் 469 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அவர்கள் வீடு திரும்பி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story