ஜூன் 20 முதல் துவங்குகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் !

ஜூன் 20 முதல் துவங்குகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் !

சட்டமன்ற கூட்டத்தொடர் !

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் 2024 ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20 ஆம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு பதில் காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், காலை 9.30 முதல் மதியம் 1.30 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Tags

Next Story