இந்திய ஜனநாயகம் மீதான தாக்குதல் - விஜய் வசந்த் எம்.பி

இந்திய ஜனநாயகம் மீதான தாக்குதல் - விஜய் வசந்த் எம்.பி
விஜய் வசந்த் எம்.பி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்றத்திற்குள் விஷமிகள் புகுந்து நடத்திய தாக்குதல் இந்திய ஜனநாயகம் மீதான தாக்குதல். பாராளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடந்த இந்த செயல் பாதுகாப்பு மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூடும் இடத்தில் பாதுகாப்பு பலவீனமாக இருப்பது அதிர்ச்சி மற்றும் பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக இந்த தினம் பாராளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள். அதை கருத்தில் கொண்டு பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். அரசின் உளவுத்துறையின் பெரிய மெத்தனத்தையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விஷமிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலை அளிக்கிறது. பாதுகாப்பில் நடந்த இந்த பெரிய வீழ்ச்சி குறித்து விசாரிக்க ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்தத் சம்பவம் மீது தீவிர விசாரணை நடத்தி இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.




Tags

Next Story