பெண் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

பெண் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

காவல்துறை விசாரணை

கோலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனம் - தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல். இரண்டு பேர் கைது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த தாதிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியர் குப்பன்-ஜமுனா (வயது 50). விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் நடராஜன் (49), பலராமன் (43). இவர்களின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். உறவினர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ஜமுனா தனது வீட்டு வாசலில் போட்டிருந்த கோலத்தின் மீது சென்றுள்ளது. இதை ஜமுனா தட்டிக்கேட்டார்.உறவினருக்கு ஆதரவாக செயல்பட்ட பலராமன், நடராஜன் ஆகியோர் ஜமுனாவிடம் சண்டையிட்டு, அவரை கொம்பு மற்றும் கம்பியால் தாக்கி உள்ளனர். அதில் காயமடைந்த ஜமுனா வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேல்பாடி போலீசில் ஜமுனா புகார் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீதா மற்றும் போலீசார் விரைந்து வந்து பலராமன், நடராஜனை கைது செய்தனர். அவர்களை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story