சேப்பாக்கம் மைதானத்தில் வாக்களித்தல் குறித்து விழிப்புணர்வு

சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவர்களிடம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று ( 8.4.2024) மாலை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, விளையாட்டு மைதானத்திற்கு வெளியே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலினை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு , வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கிரிக்கெட் மைதானத்திலும் மின்னணுத் திரையின் வாயிலாக வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிரிக்கெட் ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தப்பட்டது. மேலும் மைதானத்திற்கு வெளியே ,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கமும் நடத்தப்பட்டது.

Tags

Next Story