சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம்

வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைத்தார் ஏலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

செவ்வாழை அதிக விலை 480 ஆகவும் குறைந்த விலை 100 ஆகவும் , தேன்வாழை அதிகவிலை 380 ஆகவும் குறைந்தவிலை 100 ஆகவும் , பூவன்வாழை அதிகவிலை 200 ஆகவும் குறைந்தவிலை 50 ஆகவும் , ரஸ்தாளி அதிகவிலை 480 ஆகவும் குறைந்தவிலை 120 ஆகவும் , மொந்தன் அதிகவிலை 100 குறைந்தவிலை 80 கிலோ விலையாகவும், கதளி அதிகவிலை 13 குறைந்தவிலை 8 ஆகவும் , நேந்திரன் அதிகவிலை 20 குறைந்தவிலை 10 ஆகவும், G9 அதிகவிலை 170 குறைந்தவிலை 50 ஆகவும் விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story