வாகனங்களில் படங்கள் ஒட்ட தடையா? - நீதிமன்றம் நோட்டீஸ்

வாகனங்களில் படங்கள் ஒட்ட தடையா? - நீதிமன்றம் நோட்டீஸ்

வாகனங்களில் படங்கள் ஒட்ட தடை

சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு தமிழக அரசு பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் எனவும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை இடப்பட்டுள்ளது.


Tags

Read MoreRead Less
Next Story