வெள்ளப்பெருக்கு - குற்றால அருவிகளில் 2 வது நாளாக குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு  - குற்றால அருவிகளில் 2 வது நாளாக குளிக்க தடை

குற்றால அருவி 

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2ஆவது நாளாக இன்று குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக, குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவுமுதல் அதிகாலை வரை மழை தொடா்ந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. இதனால், 2ஆவது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

Tags

Next Story