வெளிச்சமாக மாறும்: மோகன் சி. லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

வெளிச்சமாக மாறும்: மோகன் சி. லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மோகன் சி. லாரன்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை வெளிச்சத்தின் பண்டிகை என்றும், கலங்காதீர்கள், உங்கள் இருளான வாழ்க்கை வெளிச்சமாக மாறும் என  சகோ. மோகன் சி. லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும் என்ற இறை வார்த்தையின்படி, இன்றைக்கு இந்த உலக மெங்கும் மக்களுடைய வாழ்க்கையில் இருள் சூழ்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.

யுத்தத்தினால் உண்டாகிற பாதிப்புகள் ஒரு பக்கம். இயற்கைப் பேரழிவுகளி னால்உண்டாகிற சேதங்கள் ஒரு பக்கம். பஞ்சத்தினால் உண்டாகிற வேதனைகள் ஒருபக்கம். பொருளாதாரப் பாதிப்பினால் உண்டாகிற நஷ்டங்கள் ஒரு பக்கம். கொள்ளை நோய்களினால் உண்டாகிற மரணங்கள் ஒரு பக்கம். "இனி இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியுமா?” என்கிற ஒரு பயமும், கலக்கமும்மனிதர்களை வாதித்துக் கொண்டிருக்கிறது."

Tags

Next Story