மதுக்கூடங்களுக்கான இ- டெண்டர் வாயிலாக ஏலம்

மதுக்கூடங்களுக்கான இ- டெண்டர் வாயிலாக ஏலம்

மதுபானங்கள்


திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 206 அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் (அனுமதி பெற்றுள்ள மதுக்கூடங்கள் மற்றும் மால் ஷாப் நீங்கலாக) மதுக்கூடங்கள் அமையப்பெறாத 192 கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கான இ- டெண்டர் வாயிலாக ஏலம் விடப்படுகிறது.

வருகிற 27.10.2023 அன்று மாலை 2.00 மணி வரை http://tntenders.gov.in/nicgep/app என்ற வலைதளத்திற்குள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். மேலும், இதே நாளன்று 27.10.2023 மாலை 4.30 மணியளவில் இ-டெண்டரில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,தெரிவித்துள்ளார்.

Next Story