காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

தொழிலாளர்கள் கைது

ஊட்டியில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன ஊழியர்கள் கைது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மாத்திரைகளுக்கு உறையாக பயன்படும் ஜெலேட்டின் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது எனக்கூறி தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனால், இந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மேலும், தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த ஊதியமும் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லிங் பயோடெக் எம்ப்ளாயீஸ் யூனியன் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ஆப்ரகாம் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு பேசினர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story