சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்கள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்கள்

தமிழக திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்க, 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்.

தமிழக திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்க, 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (05.01.2024) சென்னை, வானகரம். அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில், தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்களை கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. க.வீ.முரளீதரன்.இ.ஆ.ப.. கூடுதல் ஆணையர் திரு.அ.சங்கர், இ.ஆ.ப., இணை ஆணையர்கள் திரு. ச. இலட்சுமணன். திரு. பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி. திருமதி கி. ரேணுகாதேவி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story