வேலூர் தொகுதியை ஏசி சண்முகத்திற்கு ஒதுக்கிய பாஜக

வேலூர் தொகுதியை  ஏசி சண்முகத்திற்கு ஒதுக்கிய பாஜக

ஏசி சண்முகம் 

வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி - புதிய நீதி கட்சி கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நிதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி சற்று முன்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் புதிய நீதி கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில் புதிய நிதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story