ஈவிஎம் மிஷின் மூலம் தேர்தலில் மோசடி செய்ய பாஜக சதி திட்டம் தீட்டுகிறது - விசிக தலைவர் திருமாவளவன்

விசிக திமுகவிடம் பொது தொகுதி கேட்பதில் தவறில்லை ஏனென்றால் விசிக தலித்துகளுக்கான கட்சி மட்டுமல்ல என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூறு சதவீதம் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விசிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் வாக்குச் சீட்டு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் நடத்த வேண்டும். பாஜக ஆர்எஸ்எஸ் அரசு Evm மெஷின் மூலம் மோசடி செய்ய சதிதிட்டம் தீட்டுகிறது. தொடர்ந்து தமிழ்நாடில் 38 மாவட்டங்களில் இன்று ஒப்புகை சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் அழைப்பு வரும் எதிர்பார்க்கிறோம். விசிக பொது தொகுதி கேட்பதில் தவறில்லை ஏன் என்றால் விசிக தலித்துகளுக்கு மட்டுமான கட்சி அல்ல. மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனப் பேசினார்.

Tags

Next Story