திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி சாமியாக்க பா.ஜ.க முயற்சி

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி சாமியாக்க  பா.ஜ.க முயற்சி

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 

திருவள்ளுவரையே காவி சாயம் பூசி ஒரு சாமியாக்க பா.ஜ.க முயன்று வருவதாகவும், வருமானத்துறை ,அமலாக்கத்துறை , சிபிஜ சோதனை என பயமுறுத்தி பா.ஜ.கவில் சேர்த்து வருகின்றனர் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குற்றம் சாட்டினார்.
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருவள்ளுவரையே காவி சாயம் பூசி ஒரு சாமியாக்க பா.ஜ.க முயன்று வருவதாகவும் , வருமானத்துறை , அமலாக்கத்துறை , சிபிஜ சோதனை என பயமுறுத்தி பா.ஜ.கவில் சேர்த்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Tags

Next Story